“என்னடி.. அப்டியே பத்தினி மாதிரி பசப்புற..? நான் பேசுனா.. உன் வண்டவாளம்லாம் வெளிய வந்துடும்னு பயப்பட்றியா..? நான் பேசத்தாண்டி செய்வேன்..!!”
அம்மா அகங்காரமாக சொன்னாள். அதற்குள் நான் அவளை நெருங்கியிருந்தேன். அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்சினேன்.
“அம்மா.. என்னம்மா இது..? இங்க வந்து பிரச்னை பண்ணிட்டு இருக்குற..? ப்ளீஸ்மா.. எல்லாரும் பாக்குறாங்க..!!”