நண்பனின் தங்கையுடன் கள்ளக்காதல் – 1 (Nanbanin Thangaiyudan Kallakathal)

நான் அலுவலக வேலையில் மூழ்கியிருந்தேன். மேஜை முழுவதும் புராஜெக்ட் கோப்புகள் சிதறிக் கிடந்தன. என் மனம் சோர்வாக இருந்தாலும், என் கவனம் முழுவதும் லேப்டாப் ஸ்கிரீன் மேல் இருந்தது. திடீரென்று, என் மொபைல் ஒலித்தது. ரிங் டோன் என் கவனத்தைக் கலைத்தது.

நான் மொபைல் திரையைப் பார்த்தேன்.

அனிதா….

ட்ருகாலர் அந்தப் பெயரைத் தெளிவாகக் காட்டியது. ஒரு நொடி, நான் புருவத்தைச் சுருக்கினேன்.

அனிதாவா? யார் இந்த அனிதா? யோசித்தேன்.

எங்கோ கேள்விப்பட்ட பெயர் மாதிரி இருந்தது. ஆனால், அந்தப் பெயர் உடனடியாக யாரையும் எனக்கு நினைவூட்டவில்லை. ஆனாலும் அதில் ஏதோ ஒரு பழக்கம் இருப்பது போல் தோன்றியது. அதிகம் யோசிக்காமல், அழைப்பை ஏற்றேன்.

“ஹலோ,” என்றேன்.

“கார்த்திக் அண்ணா… நான் அனிதா,” என்று மறுமுனையிலிருந்து ஒரு தயக்கமான குரல் வந்தது.

அந்த தேன் குரலைக் கேட்ட மறு கணமே, நினைவுகள் வெள்ளமெனப் பாய்ந்தன. என் நெஞ்சம் சட்டென்று மலர்ந்தது. அனிதா—என் நண்பன் கணேஷின் தங்கை. வாழ்க்கை எளிமையாகவும், கவலைகள் குறைவாகவும் இருந்த அந்தக்காலத்து பள்ளிக்கூட நண்பனின் தங்கை.

“எப்படி இருக்கே, அனிதா?” மென்மையாகக் கேட்டேன்.

“நான் நல்லா இருக்கேன் ண்ணா. நீங்கள் எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன்” என்றேன்.

எங்களுக்கு இடையே ஒரு சிறிய மௌனம் நிலவியது. சொல்லப்படாத காதல் உணர்வுகளைச் சுமந்து வரும் மௌனம் அது.

“உன் ஹஸ்பண்ட் எப்படி இருக்கார்?”

“ம்..நல்லா இருக்கார், ண்ணா.”

“பையன் எப்படி இருக்கான்?”

“நல்லா இருக்கான். என்ன பயங்கர சுட்டி….”

பையனை பற்றிப் பேசும்போது அவள் குரல் உற்சாகமடைந்தது.

“இப்போ எந்த வகுப்பு படிக்கிறான்?” என்று உரையாடலை இலகுவாக வைத்திருக்க முயன்று கேட்டேன்.

“யூகேஜி படிக்கிறான், ண்ணா.”

என் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. காலம் எவ்வளவு வேகமாகச் செல்கிறது.

“ஃபைன் … உன் பையன் பெரியவனாகிவிட்டான்,” என்றேன்.

சில நிமிடங்கள், நாங்கள் பேசினோம்—வாழ்க்கையைப் பற்றி, குடும்ப விஷயங்களைப் பற்றி. ஆனால் அவள் வார்த்தைகளுக்குப் பின்னால், ஏதோ ஒரு பாரத்தை உணர்ந்தேன். பேசிவிட்டு, அவள் நிறுத்தும் இடைவெளிகள் நீண்டிருந்தன. அவள் குரல் லேசாக தயங்கியது.

பிறகு மெதுவாக, கவனமாக, அவள் போன் செய்ததற்கான உண்மையான காரணத்திற்கு வந்தாள். அவளுக்கும் கணேஷுக்கும் இடையே சொத்து பிரச்சனை. சில ஆண்டுகளுக்கு முன் அம்மா அப்பா இருவரும் இறந்து விட்டனர். கணேஷ் செய்யும் தொழிலில் நஷ்டம். கடன் பிரச்சினை அதிகமாகிவிட்டது. எனவே, பூர்வீக சொத்து முழுவதையும் விற்று கடனை அடைக்க கணேஷ் நினைக்கிறான். அனிதா சொத்தில் பங்கு கேட்பது தான் இப்போ பிரச்சினை.

அனிதா சொத்தில் பங்கு வேண்டும் என்று நினைக்கிறாள். அவள் பேராசை பிடித்தவள் போல் பேசவில்லை. ஆனால், அவள் சோர்வாகவும்… பாதிக்கப்பட்டவள் போலவும் பேசினாள்.

அவள் பேசும்போது, ஒவ்வொரு வாக்கியத்திலும் அவள் படும் போராட்டத்தையும் என்னால் உணர முடிந்தது.

நான் இதில் தலையிட வேண்டும் என்று அவள் விரும்பினாள். எப்போது வேண்டுமானாலும் கசப்பானதாக மாறக்கூடிய ஒரு குடும்பப் பிரச்சினையில் தலையிடும் அளவுக்கு அவள் என் மீது நம்பிக்கை வைத்திருந்தாள்.
என் நாற்காலியில் சாய்ந்து, ஒரு கணம் கண்களை மூடி, ஆழமாக மூச்சு விட்டேன். குடும்பச் சண்டைகள் ஒருபோதும் எளிமையானவை அல்ல. பணமும் நிலமும் சம்பந்தப்படும்போது, அன்பு பாசம் போன்ற உணர்வுகள் விலகி கோபமும் வன்மமும் தான் கொந்தளிக்கும்.

“டோன்ட் வொரி, அனிதா, ஐ வில் ஹெல்ப் யூ” என்று என் குரலைச் சீராக வைத்துக்கொண்டு இறுதியாகச் சொன்னேன்.

‘சரி ண்ணா.’

“நான் கணேஷிடம் பேசுறேன். என்னால் என்ன செய்ய முடியும்ன்னு பார்க்கிறேன்.”

‘தேங்க்ஸ் ண்ணா’.

அழைப்பு முடிந்ததும், நான் நீண்ட நேரம் அமைதியாக அமர்ந்திருந்தேன். இந்த உரையாடல் ஒரு ஆரம்பம் மட்டுமே என்றும், அடுத்து வரப்போவது எதுவாக இருந்தாலும் அது எளிதாக இருக்காது என்பதும் எனக்கு புரிந்தது.

அலுவலகம் விட்டு வெளியே வந்தேன். நேரம் சரியாக 11 மணி. கேன்டீன் சென்றேன். டீ சொல்லிவிட்டு கணேஷுக்கு போன் போட்டேன்.

அவன் மொபைல் ஒலித்தது.

அவன் அழைப்பை எடுத்ததும், “கணேஷ்… கார்த்திக் பேசறேன்,” என்றேன்.

“ஹேய்… கார்த்திக்! எப்படி இருக்கடா?” என்று அவன் கேட்டான், அவனது குரல் பாசமாகவும், பழக்கமானதாகவும் இருந்தது.

“நான் நல்லா இருக்கிறேன். நீ எப்படி இருக்கே?”

“நான் நல்லா இருக்கிறேன்டா,” என்று சாதாரணமாகச் சொன்னான். பிறகு, ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு, குறை கூறும் தொனியில், “என்னடா ஆளே காணோம். மூணு மாசத்துக்கு முன் உனக்கு கால் பண்ணுனேன். நீ போன் எடுக்கல,” என்றான் வருத்தத்துடன்.

அவனுடைய வார்த்தைகள் என்னை மென்மையாகத் தாக்கின. அவனுக்கு விளக்கம் சொன்னேன்.

“நான் குடும்பப் பிரச்சினையில் இருந்தேன் டா. எனக்கும் என் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுச்சி. சின்ன சின்ன விஷயங்கள் பெருசா ஆகிடுச்சு … நாங்க டைவோர்ஸ்க்கு அப்ளை பண்ணியிருக்கோம். அதனால்தான் என்னால யார் கூடவும் பேச முடியல” என்றேன்.

மறுமுனையில் அமைதி நிலவியது.

பிறகு அவன் மென்மையாக, “ஓ… சாரி டா. உன்னோட நிலைமை எனக்குப் புரியுதுடா,” என்றான்.

அவனுடைய அனுதாபத்தை என்னால் உணர முடிந்தது. அவன் என்னிடம் மேலும் கேள்விகள் கேட்கவில்லை. அதுவே எனக்குச் சிறிதளவு நிம்மதியை அளித்தது.

அதற்குப் பிறகு, நான் உரையாடலை அவர்கள் பிரச்சினைக்கு மாற்றினேன். அனிதா என்னிடம் பகிர்ந்துகொண்ட அனைத்தையும் அவனிடம் சொன்னேன்—நிலப் பிரச்சினை, கையொப்பம், அவளுடைய நியாயமான பங்கைப் பற்றிய அவளது எதிர்பார்ப்பு என எல்லாவற்றையும் சொன்னேன். நான் அமைதியாக, யாருக்கும் சாதகமாகப் பேசாமல், எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, கடைசியில் அவன் என்ன நினைக்கிறான் என்று கேட்டேன்.

கணேஷ் பொறுமையாகக் கேட்டான்.

“பரவாயில்லை, கார்த்திக்,” என்றான். ஒரு கணம் கழித்து அவன் சொன்னான். “நீ தலையிடலாம். நாம இதை ஸ்மூத்தா தீர்க்க முயற்சிப்போம்.”

அவனுடைய பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் எதிர்ப்பை எதிர்பார்த்தேன், ஆனால் அதற்குப் பதிலாக, அவன் திறந்த மனதுடன் பேசினான்.

பிறகு அவன், “நீ ஃப்ரீயா இருக்கிறாயா? ஏற்கெனவே உன் சொந்தப் பிரச்சினைகளை ஃபேஸ் பண்ணிக்கிட்டு இருக்கே. உனக்கு டைம் கிடைக்குமா?” என்று கேட்டான்.

நான் லேசாகப் புன்னகைத்தேன்.

“பிரச்சினை இல்லை,” என்று பதிலளித்தேன். “என்னால் உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்.” என்றேன்.

சில நொடி மவுனம் ஏற்பட்டது.

“உனக்கும் அனிதாவுக்கும் இடையில் மத்தியஸ்தனாகச் செயல்பட நான் ரெடி,” என்று உறுதியாகக் கூறினேன்.

“சரி டா,” என்று கணேஷ் ஒப்புக்கொண்டான்.

“நில ஆவணங்களை வாட்ஸ்அப்பில் எனக்கு அனுப்பு,” என்று அவனிடம் சொன்னேன்.

‘ம்….அனுப்பறேன்’

“முதலில் நான் அவற்றை ஒருமுறை பார்க்கிறேன்.” என்றேன்.

“சரிடா. நான் இப்போ அனுப்புறேன்,” என்று அவன் பதிலளித்தான்.

நான் ஃபோனை கீழே வைத்துவிட்டு, ஏற்கெனவே ஆறிப்போயிருந்த என் டீயை ஒரு மிடறு குடித்தேன். நான் டீ குடித்து முடித்த உடனேயே, என் ஃபோன் அதிர்ந்தது.

கணேஷ் நில ஆவணங்களை அனுப்பியிருந்தான்.

பிறகு நான் அலுவலக வேலையில் மூழ்கிப்போனேன். சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் சற்று கண்ணயர்ந்தேன்.

என் தொலைபேசி மீண்டும் ஒலித்தது.

அனிதா காலிங்…….

“ஹாய், அனிதா,”

“அண்ணா… சும்மா தான் போன் செஞ்சேன்,” மென்மையாக கொஞ்சலாக சொன்னாள்.

“ஆங்…, அனிதா. கணேஷிடம் பேசிட்டேன்,”

“ஓ…அப்படியா ண்ணா ….” இவ்வளவு விரைவான நடவடிக்கையை என்னிடம் அவள் எதிர்பார்க்காததால், அவள் குரலில் ஆச்சரியம் தெரிந்தது.

கணேஷ் என்னிடம் சொன்ன அனைத்தையும், என் தலையீட்டிற்கு அவன் ஒப்புக்கொண்டான் என்பதையும் விளக்கினேன்.

“லேண்ட் டாகுமெண்ட்ஸ் எல்லாம் எனக்கு வாட்ஸ்அப்பில் வந்துவிட்டன,” என்று மேலும் கூறினேன்.

ஒரு சிறிய மௌனம் நிலவியது.

“அண்ணா… நாளைக்கு என் வீட்டுக்கு வர முடியுமா?” அவள் தயக்கத்துடன் கேட்டாள்.

என் மனதில் நாளை என்ன கிழமை என்று யோசித்தேன். நான் என்ன யோசிக்கிறேன் என்று புரிந்து கொண்டு

“நாளை சனிக்கிழமை, ண்ணா” என்றாள்.

“ம்….எனக்கு லீவ் தான். சரி, நான் வர்றேன். உங்க வீட்டு அட்ரஸ் எனக்கு அனுப்பு.”

“சரி, ண்ணா. நான் லொகேஷன் ஷேர் பண்றேன்,” அவள் பதிலளித்தாள், அவள் குரலில் நிம்மதி தெரிந்தது.

“சரி, அனிதா,”

“ஓகே ண்ணா”

“உனக்கு எந்த நேரம் வசதியாக இருக்கும்?”

“காலைல பத்து மணி… சரியா இருக்கும் ண்ணா?”

“ஓகே, அனிதா. காலை பத்து மணிக்கு நான் அங்கே இருப்பேன்.”

அழைப்பு முடிந்ததும், என் நெஞ்சில் ஒரு அமைதியான பாரம் வந்து அமர்ந்தது போல் உணர்ந்தேன். அதே நேரம் என் ரகசிய தேவதை, நெடுநாள் கிரஷ், அனிதாவை பல வருடங்களுக்குப் பிறகு நேரில் பார்க்க போகிறேன் என்கிற மகிழ்ச்சி என்னை சந்தோஷத்தில் மூழ்கடித்தது.

மறுநாள் காலை, அனிதாவின் வீட்டிற்குச் சென்றேன்.

InPp <--->